Kalaigirathey Kanave |
---|
கலைகிறதே கனவே
விடியாதோ இரவே
வாழ்வே இனிமேல்
வழி ஆகாதா
மறைத்திடலாம் சாட்சி
மறைந்திடுமோ காட்சி
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா
ஊக்க துணையே உன் சொல் வழியே
ஏக்கம் தந்தால் என்னாவேன்
காக்கும் கரமே விழிகள் மூட
எங்கே செல்வேன் இனி நானே
வழி இல்லா காட்டில் தொலைத்தேனா
இல்லைவழி தேடி வானம் தொடுவேனா
இலையெல்லாம் விழுந்தாலும்
மரம் இங்கு வீழாது
இளவேனில் அது நீதானே
இருள் உன்னை சூழ்ந்தாலும்
இருளாகி போகாதே
ஒளி ஏந்து
அடி பகலே நீ
காலங்கள் உன்னோடு
காயங்கள் காற்றோடு
வா வா வாழ்ந்து பார்க்கலாம்
போகாத ஆழங்கள்
ஆகாய தூரங்கள் போவோம்
வா வென்று வான்னேறி
வாள் கொண்டு சாய்த்தாலும்
போராடும் வேறாகி
வா வா நிமிர்ந்து நிற்கவா
பூ போல வீழாமல்
வேர் போல நீ மாறி
வா வா வாகை சூடவா
புதிர்கள் யாவும் விடைகள் ஆகி
உடலில் சிறகை தருகிறதே
விடைகள் தந்த திசையில் இன்று
புதியதாய் பறவை பறக்கிறதே
பிறக்காத விடியல் கிடையாது
பெண்ணே
திறக்காத திசைகள் கிடையாது