Kalaigirathey Kanave

Kalaigirathey Kanave Song Lyrics In English


கலைகிறதே கனவே
விடியாதோ இரவே
வாழ்வே இனிமேல்
வழி ஆகாதா

மறைத்திடலாம் சாட்சி
மறைந்திடுமோ காட்சி
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா

ஊக்க துணையே உன் சொல் வழியே
ஏக்கம் தந்தால் என்னாவேன்
காக்கும் கரமே விழிகள் மூட
எங்கே செல்வேன் இனி நானே

வழி இல்லா காட்டில் தொலைத்தேனா
இல்லைவழி தேடி வானம் தொடுவேனா

இலையெல்லாம் விழுந்தாலும்
மரம் இங்கு வீழாது
இளவேனில் அது நீதானே
இருள் உன்னை சூழ்ந்தாலும்
இருளாகி போகாதே
ஒளி ஏந்து
அடி பகலே நீ


காலங்கள் உன்னோடு
காயங்கள் காற்றோடு
வா வா வாழ்ந்து பார்க்கலாம்
போகாத ஆழங்கள்
ஆகாய தூரங்கள் போவோம்
வா வென்று வான்னேறி

வாள் கொண்டு சாய்த்தாலும்
போராடும் வேறாகி
வா வா நிமிர்ந்து நிற்கவா
பூ போல வீழாமல்
வேர் போல நீ மாறி
வா வா வாகை சூடவா

புதிர்கள் யாவும் விடைகள் ஆகி
உடலில் சிறகை தருகிறதே
விடைகள் தந்த திசையில் இன்று
புதியதாய் பறவை பறக்கிறதே

பிறக்காத விடியல் கிடையாது
பெண்ணே
திறக்காத திசைகள் கிடையாது