Kalaimagal Song Lyircs |
---|
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
{உன்னிடம்
ஆயிரம் ராகங்களே
என்றும் உனக்குள்
ஆயிரம் கீதங்களே} (2)
இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இல்லை எனக்கேனும்
வழி காட்டுங்களேன்
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
{நான் யார் உன்னை மீட்ட
வரும் நன்மைக்கும் தீமைக்கும்
வழி காட்ட} (2)
ஏனோ துடிக்கின்றேன்
ஏனோ துடிக்கின்றேன்
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
{சொர்க்கமும் நரகமும்
நம் வசமே
நான் சொல்வதை
உன் மனம் கேட்கட்டுமே} (2)
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே(2)
இது தாய்மையின்
குரலாய் ஒலிக்கட்டுமே
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே