Kalaiyatha Kanavondru Kanden

Kalaiyatha Kanavondru Kanden Song Lyrics In English


கலையாத கனவொன்று கண்டேன் கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்

கலை பேசி வலை வீசும் விழிகள் இன்ப கலை பேசி வலை வீசும் விழிகள் ஏதும் விலை பேச முடியாத அமுதான மொழிகள்

கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்

மை தீட்டும் விழியாலே மன்றாடினேன் அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன் மை தீட்டும் விழியாலே மன்றாடினேன் அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன் கையோடு கை சேர்த்து கரை ஏறினேன் கையோடு கை சேர்த்து கரை ஏறினேன் இரு கண்ணோடு கண் சேர கல்யாணம் நடந்தேற


கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்

விரல் காட்டும் ஜதி கேட்டு நடமாடினேன் அவர் குரல் கேட்கும் விருப்போடு விரைந்தோடினேன் விரல் காட்டும் ஜதி கேட்டு

திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன் திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன் தன் நினைவின்றி அவரோடு தினம் கூடி உறவாடி கலையாத கனவொன்று கண்டேன்