Kalaiyatha Kanavondru Kanden |
---|
கலையாத கனவொன்று கண்டேன் கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்
கலை பேசி வலை வீசும் விழிகள் இன்ப கலை பேசி வலை வீசும் விழிகள் ஏதும் விலை பேச முடியாத அமுதான மொழிகள்
கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்
மை தீட்டும் விழியாலே மன்றாடினேன் அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன் மை தீட்டும் விழியாலே மன்றாடினேன் அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன் கையோடு கை சேர்த்து கரை ஏறினேன் கையோடு கை சேர்த்து கரை ஏறினேன் இரு கண்ணோடு கண் சேர கல்யாணம் நடந்தேற
கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்
விரல் காட்டும் ஜதி கேட்டு நடமாடினேன் அவர் குரல் கேட்கும் விருப்போடு விரைந்தோடினேன் விரல் காட்டும் ஜதி கேட்டு
திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன் திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன் தன் நினைவின்றி அவரோடு தினம் கூடி உறவாடி கலையாத கனவொன்று கண்டேன்