Kalaiye Un Ezhil Meni

Kalaiye Un Ezhil Meni Song Lyrics In English


கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கணநேரம் பிரிந்தாலும்
கனல் ஆவதேன்
கலையே உன் எழில் மேனி கலையாவதேன்
காதல் கணநேரம் பிரிந்தாலும்
கனல் ஆவதேன்

கலையே உன் எழில் மேனி கனியாவதேன்

உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்
நம் உயிரோடு உயிர் சேர்ந்து
பெறும் இன்பத்தேன்
உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்
நம் உயிரோடு உயிர் சேர்ந்து
பெறும் இன்பத்தேன்

இரு வேறு பொருள் கூறும்
கண்பார்வை ஏன்
இரு வேறு பொருள் கூறும்
கண்பார்வை ஏன்
ஒன்று நோய் தந்ததேன்
ஒன்று மருந்தானதேன்

பருவத்தின் ஒரு பார்வை
நோயாகுமே எழில்
உருவத்தின் துணை சேர
மருந்தாகுமே

சிரிக்கின்ற இதழ் கூட
கலை பேசுதே
வாய் மணக்கின்ற மொழியாவும்
கவி பாடுதே

கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கணநேரம் பிரிந்தாலும்
கனல் ஆவதேன்


நினைக்கின்ற நினைவுங்கள்
நினைவானதே அதில்
பிறக்கின்ற நாணம் கலையானதே
நினைக்கின்ற நினைவுங்கள்
நினைவானதே அதில்
பிறக்கின்ற நாணம் கலையானதே

எழில் அன்னமே எங்கும்
உன் வண்ணமே

கலை மன்னவா எந்தன்
உயிர் அல்லவா

எழில் அன்னமே எங்கும்
உன் வண்ணமே

கலை மன்னவா எந்தன்
உயிர் அல்லவா

இருவர் : கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம்
நம் மனம் நாடும் சுகம் யாவும்
தினம் காணுவோம்
கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம்