Kalaiyile Malai Vanthathu |
---|
காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த
வேளை வந்தது
இனி காலமெல்லாம்
உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான்
இனி சரணமென
இந்த வானமும் பூமியும்
வாழ்த்து சொல்ல
காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
கண்களை நான் கட்டிக்கொண்டு
வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு
ஹோ எண்ணத்தை நான்
எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடும் முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இருவிழிகளில் கதை எழுது
காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இன்று முதல் வாழும் வரை
நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு
ஹோ சிந்தனையில் வந்து வந்து
போகும் உனக்கு
சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு
காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம்
உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான்
இனி சரணமென
இந்த வானமும் பூமியும்
வாழ்த்து சொல்ல
காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது