Kalaiyile Malai Vanthathu

Kalaiyile Malai Vanthathu Song Lyrics In English


காலையிலே மாலை வந்தது

நான் காத்திருந்த
வேளை வந்தது

இனி காலமெல்லாம்
உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான்
இனி சரணமென
இந்த வானமும் பூமியும்
வாழ்த்து சொல்ல

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது

கண்களை நான் கட்டிக்கொண்டு
வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு

ஹோ எண்ணத்தை நான்
எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடும் முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இருவிழிகளில் கதை எழுது

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது


இன்று முதல் வாழும் வரை
நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு

ஹோ சிந்தனையில் வந்து வந்து
போகும் உனக்கு
சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது

இனி காலமெல்லாம்
உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான்
இனி சரணமென
இந்த வானமும் பூமியும்
வாழ்த்து சொல்ல

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது