Kalaiyum Megangale Kadhal |
---|
கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே
கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே
உன்னை நான் பார்த்தேன்
என்னை நீ பார்த்தாய்
நான் பார்த்ததும் நீ பார்த்ததும்
வெவ்வேறு கோணம்
நிழலை நான் பார்த்தேன்
அதுதான் ஏமாந்தேன்
உன் மீதிலே என் நெஞ்சிலே
எனக்கென்ன கோபம்
பொய் மானைத் தேடினேன்
மெய் சோர்ந்து போகிறேன்
கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பாலும் கள்ளென்று
எண்ணும் நினைவொன்று
என் நெஞ்சிலே நான் கொண்டது
தவறென்று கண்டேன்
கானல் தண்ணீரும்
கங்கை தண்ணீரும்
ஒன்றல்லவே என்றெண்ணவும்
அறியாது நின்றேன்
எல்லோரும் கண்ணனா
நீ கொஞ்சம் வேறுதான்
கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே