Kalangaathiru Manamey |
---|
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும்
ஒரு தினமே ஒரு தினமே
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது
கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது
உனக்கு ஆகாததேது
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
ஆண் வாடை கூடாதென்ற
அல்லியும் ஒரு நாள்
ஆண் வாடை கூடாதென்ற
அல்லியும் ஒரு நாள்
அர்ச்சுனன் வலைதனில்
அர்ச்சுனன் வலைதனில்
வீழ்ந்தனள் சரியாய்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
பகட்டுக்காக உம்மைப்
பார்க்கவே மறுத்தாலும்
பகட்டுக்காக உம்மைப்
பார்க்கவே மறுத்தாலும்
பருவக் காலம் அவனைப்
பாடாய்ப் படுத்தி விடும்
பருவக் காலம் அவனைப்
பாடாய்ப் படுத்தி விடும்
அடுத்த கணம் உன் மேல்
ஆசையும் வைப்பாள்
அடுத்த கணம் உன் மேல்
ஆசையும் வைப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும்
ஒரு தினமே ஒரு தினமே
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே