Kalayana Melamadi |
---|
திருவள்ளுவர் பேட்ட செல்வரத்தினம் பையன்
சீனிவாசங்குற கண்ணனுக்கும்
தஞ்சாவூரு சில்லா மாயவரம் பக்கம்
மன்னாரு சாமி மக ருக்குமணிக்கும்
நாளைக்கு கல்யாணம்
இன்னைக்கு ஊர்கோலம்
என்னைக்கும் சந்தோசம்
இருவர் : சந்தோசம்
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
என் பொண்டாட்டி கழுத்தினிலே
போட வந்தேன் பாட வந்தேன்
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி ஹேய் கேக்குதடி
கேட்டா கொடுக்கும் காமதேனு
கொடுத்தா பெருகும் குவியும் பொன்னு
எல்லாம் நமக்காக
மாரி போல் பொழியனும்
மனசெல்லாம் வழியனும்
நடக்கும் நடக்கும்
நல்லா கெடைக்கும்
சாமி எல்லாம் கொடுக்கும் ஏழைய ஒசத்தும்
கல்யாண மேளமடி ஹே மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பாலாப் பெருகி பொங்கி வழியும்
பல நாள் கனவு இன்று விடியும்
அடியே ருக்குமணி
ஆசையா ருசிக்கலாம்
ஆரத்தி எடுக்கலாம்
கனவா கனவா இல்ல நெனவா
ஒன்னத் தொடவா மெதுவா
சொன்னேன் பொதுவா
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
உன் பொண்டாட்டி கழுத்தினிலே
போட்டு விடு பூட்டி விடு
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
வயசோ சிறுசு வாழ வயசு
மனசோ பெருசு ஆச மனசு
ரசிக்கும் எனப் பாத்து
கனவுல மெதக்குறேன்
கவலைய மறக்குறேன்
தனியா தன்னந்தனியா
சின்னப் பனியா
ஒனக்கே பணிஞ்சே இருக்கேன்
கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
என் பொண்டாட்டி கழுத்தினிலே
போட வந்தேன் பாட வந்தேன்
இருவர் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி