Kalayil Kettadhu

Kalayil Kettadhu Song Lyrics In English


ஆஹஹஹஆஆ
ஆஹஹஹஆஆஆஹஹா
ஆஹஹஹஆஆஆஹஹா

காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பாதையில் ஏதோ ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி

காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது

தேவியின் கண்விழி பானம்தான் விட்டது

புதுவித அனுபவம்

அஹ ஆஅஹஹா

முதல் முதல் அறிமுகம்

ஓஹ் ஓஹஹொ

புதுவித அனுபவம்
முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது

காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பாதையில் ஏதோ ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி


காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

இம்இம்இம்இம்இம்இம்
இம்இம்இம்இம்இம்இம்

தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

காதலா என் மனம்
சேர்ந்ததே உன் வழி

ரகசியம் புரிந்தது

அஹ ஆஅஹஹா

அதிசயம் தெரிந்தது

ஓஹ் ஓஹஹொ

ரகசியம் புரிந்தது
அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது

காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பாதையில் ஏதோ ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி

காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி