Kalla Malar |
---|
கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
சொல்லுமின்றி மொழியுமின்றி
மௌனமாகப் படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள்
காணிக்கையாய்க் கொடுத்தாள்ஆஅ
சொல்லுமின்றி மொழியுமின்றி
மௌனமாகப் படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள்
காணிக்கையாய்க் கொடுத்தாள்ஆஅ
துள்ளியெழும் ஆசையால்
தூக்கமின்றித் தவித்தாள்
துள்ளியெழும் ஆசையால்
தூக்கமின்றித் தவித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு
மாலை போடத் துடித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு
மாலை போடத் துடித்தாள்
கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
அன்புக் கைகள் அணைப்பினிலே
ஆவல் தீரும் பொன் நாள்
இன்பமெனும் உலகினிலே
இணைந்து வாழும் நன் நாள்ஆஅ
அன்புக் கைகள் அணைப்பினிலே
ஆவல் தீரும் பொன் நாள்
இன்பமெனும் உலகினிலே
இணைந்து வாழும் நன்நாள்
என்று வரும் என்று வரும்
கனவு காணும் அந்நாள்
என்று வரும் என்று வரும்
கனவு காணும் அந்நாள்
என்று எண்ணி ஏங்குகிறாள்
அன்ன நடை பெண்ணால்
என்று எண்ணி ஏங்குகிறாள்
அன்ன நடை பெண்ணால்
கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே