Kallirukkum Malar |
---|
கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகியை
இலங்கையற் கோன் களவு சூழ்ந்த
கள்ளமற ஸ்ரீராமன் களங் கொண்டு
கை வளைத்துத் தொடுத்த வாளி
உள்ளிருக்கும் உயிர் கொண்டு
இலங்கையற் கோன் உடலை
வெறுங்கூடு செய்து
வெள்ளமெனக் குருதி வரத்
தர்மத்தின் வெற்றி வர
விளைத்ததம்மாஆஆ
வெற்றி விளைந்ததம்மா
வெற்றி விளைந்ததம்மா
அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்
அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்
செம்பஞ்சு பூசிய பாதத்திலே
சிறுவிரல் மோதிரம் வளைத்து வைப்போம்
செம்பஞ்சு பூசிய பாதத்திலே
சிறுவிரல் மோதிரம் வளைத்து வைப்போம்
அம்பினும் கூறிய கண்களிலே
அஞ்சன மையிட்டு அழகு செய்வோம்
அமுதினை அலங்கரிப்போம்
அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்
வையம் நிலையறிய
மன்னவர்கள் உனையறிய
வையம்ம்ம்ம்ம் நிலையறிய
மன்னவர்கள் உனையறிய
ஐயம் மறைந்துபட
அனைத்துலகம் பணிந்து வர
பொய் தவிர்ந்த நேர்மை
பொன்மலராம் ஜானகியை
நெய் வளர்த்த தீயில்
நீந்திவர ஆணையிட்டேன்
ஆணையிட்டேன்
நெருப்பினை நெருப்பே நீயும்
நெருங்குதல் இயலுமாயின்
நேரிய எனது மேனி
நெருங்குக நெருப்பே இன்று
மருப்பெனத் திரண்ட தோளின்
மன்னவன் கண் முன்னாலே
மை குழல் மலரையேனும்
எரிப்பையோ நெருப்பே வா
எரிப்பையோ நெருப்பே வா
எரிப்பையோ நெருப்பே வா
காண வேண்டும் லட்சம் கண்கள்
காண வேண்டும் லட்சம் கண்கள்
சீதா தேவியின் காலுக்கு நிகரோ பெண்கள்
காண வேண்டும் லட்சம் கண்கள்
சீதா தேவியின் காலுக்கு நிகரோ பெண்கள்
காண வேண்டும் லட்சம் கண்கள்
நவரத்தின தங்கத்தோடு
நடையிலே அன்னப்பேடு
நவரத்தின தங்கத்தோடு
நடையிலே அன்னப்பேடு
அவனுக்கு இல்லை ஈடு
அவனுக்கு அவளே ஈடு
காண வேண்டும் லட்சம் கண்கள்