Kallirukkum Malar

Kallirukkum Malar Song Lyrics In English


கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகியை
இலங்கையற் கோன் களவு சூழ்ந்த
கள்ளமற ஸ்ரீராமன் களங் கொண்டு
கை வளைத்துத் தொடுத்த வாளி

உள்ளிருக்கும் உயிர் கொண்டு
இலங்கையற் கோன் உடலை
வெறுங்கூடு செய்து
வெள்ளமெனக் குருதி வரத்
தர்மத்தின் வெற்றி வர
விளைத்ததம்மாஆஆ
வெற்றி விளைந்ததம்மா
வெற்றி விளைந்ததம்மா

அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்
அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்

செம்பஞ்சு பூசிய பாதத்திலே
சிறுவிரல் மோதிரம் வளைத்து வைப்போம்
செம்பஞ்சு பூசிய பாதத்திலே
சிறுவிரல் மோதிரம் வளைத்து வைப்போம்
அம்பினும் கூறிய கண்களிலே
அஞ்சன மையிட்டு அழகு செய்வோம்

அமுதினை அலங்கரிப்போம்
அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்

வையம் நிலையறிய
மன்னவர்கள் உனையறிய
வையம்ம்ம்ம்ம் நிலையறிய
மன்னவர்கள் உனையறிய
ஐயம் மறைந்துபட
அனைத்துலகம் பணிந்து வர
பொய் தவிர்ந்த நேர்மை
பொன்மலராம் ஜானகியை
நெய் வளர்த்த தீயில்
நீந்திவர ஆணையிட்டேன்
ஆணையிட்டேன்


நெருப்பினை நெருப்பே நீயும்
நெருங்குதல் இயலுமாயின்
நேரிய எனது மேனி
நெருங்குக நெருப்பே இன்று

மருப்பெனத் திரண்ட தோளின்
மன்னவன் கண் முன்னாலே
மை குழல் மலரையேனும்
எரிப்பையோ நெருப்பே வா
எரிப்பையோ நெருப்பே வா
எரிப்பையோ நெருப்பே வா

காண வேண்டும் லட்சம் கண்கள்
காண வேண்டும் லட்சம் கண்கள்
சீதா தேவியின் காலுக்கு நிகரோ பெண்கள்
காண வேண்டும் லட்சம் கண்கள்
சீதா தேவியின் காலுக்கு நிகரோ பெண்கள்
காண வேண்டும் லட்சம் கண்கள்

நவரத்தின தங்கத்தோடு
நடையிலே அன்னப்பேடு
நவரத்தின தங்கத்தோடு
நடையிலே அன்னப்பேடு
அவனுக்கு இல்லை ஈடு
அவனுக்கு அவளே ஈடு

காண வேண்டும் லட்சம் கண்கள்