Kalviya Selvama Veerama |
---|
கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா
ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று
உருவாகுமா இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா
கற்றோர்க்கு
பொருள் இன்றி பசி
தீருமா கற்றோர்க்கு
பொருள் இன்றி பசி
தீருமா பொருள் பெற்றோர்க்கு
அறிவின்றி புகழ் சேருமா
கற்றோர்க்கு பொருள்
இன்றி பசி தீருமா பொருள்
பெற்றோர்க்கு அறிவின்றி
புகழ் சேருமா
கற்றாலும்
பெற்றாலும் பலம்
ஆகுமா கற்றாலும்
பெற்றாலும் பலம்
ஆகுமா வீரம் காணாத
வாள் என்றும் வாழ்வாகுமா
வீரம் காணாத வாள் என்றும்
வாழ்வாகுமா
கல்வியா செல்வமா
வீரமா
படித்தவன்
கருத்தெல்லாம் சபை
ஏறுமா பணம் படைத்தவன்
கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் கருத்தெல்லாம்
சபை ஏறுமா பணம் படைத்தவன்
கருத்தானால் சபை மீறுமா
படித்தவன்
படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன்
யாராயினும் பலம்
படைத்திருந்தால்
அவனுக்கிணையாகுமா
பலம் படைத்திருந்தால்
அவனுக்கிணையாகுமா
கல்வியா செல்வமா
வீரமா
ஒன்றுக்குள்
ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக
பொருளானது ஒன்றுக்குள்
ஒன்றாக கருவானது அது
ஒன்றினில் ஒன்றாக
பொருளானது
ஒன்றை ஒன்று
பகைத்தால் உயர்வேது
ஒன்றை ஒன்று பகைத்தால்
உயர்வேது மூன்றும் ஓரிடத்தில்
இருந்தால் நிகரயேது மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது
கல்வியா செல்வமா
வீரமா
மூன்று தலை
முறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும்
மதி வேண்டுமா மூன்று தலை
முறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும்
மதி வேண்டுமா
தூங்கும் பகை
நடுங்கும் பலம் வேண்டுமா
தூங்கும் பகை நடுங்கும் பலம்
வேண்டுமா இவை மூன்றும்
துணை நிற்கும் நலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை நிற்கும்
நலம் வேண்டுமா
கல்வியா செல்வமா
வீரமா அன்னையா தந்தையா
தெய்வமா ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா
வீரமா