Kalyana Panthalile Annaiyai

Kalyana Panthalile Annaiyai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்
விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த
அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு

கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்
விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த
அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு

பாலைவனம் இன்று பூப்பூத்தது
இந்த பூ பூக்கவே நல்ல நாள் பார்த்தது
ஆஆஆ
நாள்தோறுமே இங்கு தீபாவளி
இனி நாள்தோறுமே இன்ப நாமாவளி

தம்பதியானோம் என்று நல்ல
நிம்மதி நெஞ்சில் கொண்டு
வாழ்ந்திட வேண்டும் நீங்கள்
உம்மால் வாழ்ந்திட வேண்டும் நாங்கள்

உங்கள் தோளில் மாலைகள் நாங்கள் அல்லவோ

கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்

விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த

பெண்கள் : அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு


தாயானவள் எந்தன் சேயாகினாள்
இன்பக் கண்ணீரிலே என்னை நீராட்டினாள்
ஆஆஆ
தந்தை மனம் நல்ல பிருந்தாவனம்
அன்னை தாலாட்டுதே மணமாலை மணம்

அன்பெனும் கோயில் இங்கே அதில்
ஆயிரம் தீபம் இங்கே
ஏற்றிய தீபம் வாழ்க இந்த
இல்லறக் கோலம் வாழ்க

அன்னை உந்தன் குங்குமம் என்றும் மங்கலம்

கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்

விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த

பெண்கள் : அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு

பெண்கள் :