Kalyana Pudava Katti |
---|
கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே
உருவமென்ற முல்லையிலே
உள்ளமென்ற தேனையள்ளி
உருவமென்ற முல்லையிலே
உள்ளமென்ற தேனையள்ளி
ஒருவனுக்கு வைத்திருந்தேன் உறவிலே
அவன் ஒடமேறிச் சென்று விட்டான் இரவிலே
கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே
செப்புச் சிலை மேனி என்று
செப்பி வந்த தேவ மகன்
செப்புச் சிலை மேனி என்று
செப்பி வந்த தேவ மகன்
செப்பியது யாவுமின்று பொய்மையே
நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே
நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே
மாண்ட உடல் மறைந்தாலும்
மண்ணில் சென்று ஒளிந்தாலும்
மாண்ட உடல் மறைந்தாலும்
மண்ணில் சென்று ஒளிந்தாலும்
மீண்டும் வந்து பிறந்தாலும் உறவிலே
எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே
எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே
கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலேஏ