Kalyanam Aagatha Ponnu |
---|
கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
காதல் கோயில் தேவதை கால் நடக்கும் தாமரை
பக்கம் வரும் தொட்டா மட்டும் வெட்கம் வரும்
கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
தென்னஞ்சோலை ஓரம்தான்
தென்றல் வீசும் நேரந்தான்
மாமன் பொண்ணு போக மாப்பிள்ளையை தேட
வயசு வந்த நாளிலே பரிசம் போட ஆளில்லை
வருஷம் ஓடிப் போச்சு வருத்தமாக ஆச்சு
ஊரறிய ஒருநாள் மணம் முடிப்பேன்
உறவறிய ஒருத்தன் கைப் பிடிப்பேன்
கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
காதல் கோயில் தேவதை கால் நடக்கும் தாமரை
பக்கம் வரும் தொட்டா மட்டும் வெட்கம் வரும்
கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
மஞ்சப் பூசி குளிச்சவ
மலரைப் போல சிரிச்சவ
பளபளன்னு வந்து படிக்கிறாளே சிந்து
கெட்டி மேளம் கொட்டணும்
தாலி கழுத்தில் கட்டணும்
எனக்கு ஏத்த ஆளு எவன் இருக்கான் கூறு
ஆவணியில் எனக்கு திருமணம்தான்
அது முடிஞ்சா இனியும் இரு மனம்தான்
ஆவணியில் எனக்கு திருமணம்தான்
அது முடிஞ்சா இனியும் இரு மனம்தான்
கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
காதல் கோயில் தேவதை கால் நடக்கும் தாமரை
பக்கம் வரும் தொட்டா மட்டும் வெட்கம் வரும்
கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு