Kalyanam Enbadhu |
---|
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பொண்ணுக்கும் பிள்ளைக்கும்
தந்தான தந்தான
பொருத்தம் பார்த்து
தந்தான தந்தான
இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்
இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா
ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா
ஒரு ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா
ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா
மாந்தோப்பில் பாடும் குயில் பாடாது சும்மா சும்மா
மார் மீது ஆசை மயில் தானாடக் கண்டேனம்மா
சந்திரன் வந்தொரு மந்திரம் சொன்னதும்
கன்னியத் தொட்டதும் மன்மதனோ
மன்மதன் வந்ததும் சங்கதி சொன்னதும்
சம்மதப்பட்டது செண்பகமோ
கல்யாணம் என்பது
ஆஹா கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பொண்ணுக்கும் பிள்ளைக்கும்
தந்தான தந்தான
பொருத்தம் பார்த்து
தந்தான தந்தான
இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்
இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
மானே இளமை அழகோ இதுதானடி
பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி
இளமானே இளமை அழகோ இதுதானடி
பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி
தோளோடு ஆச மச்சான் தோள் சேரும் நேரத்துல
தூதாகி காதல் நிலா தாலாட்டும் வானத்திலே
தொட்டதும் பட்டதும் சிட்டுக்குருவிக்கு
நித்திரை கெட்டது என்னடியோ
வெக்கமும் நாணமும் அச்சம் மடமையும்
எங்கேடி போனது சொல்லடியோ
கல்யாணம் என்பது
ஹே கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பொண்ணுக்கும் பிள்ளைக்கும்
தந்தான தந்தான
பொருத்தம் பார்த்து
தந்தான தந்தான
இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்
இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
இருவர் : பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ