Kalyanam Panni Kollamma |
---|
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
ஒன்னால ஊருக்கெல்லாம்
ஒழுங்கான வாழ்க்கை இருக்கு
பின்னால வருந்திட வேணா
பெரும் சொத்தும் காத்துக் கெடக்கு
அடங்காத துட்டும் இருக்கு
அவருக்கும் உன் மேல்
இஷ்டம் இருக்கு
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
சித்திரைக்கு அப்புறம்
தேதி வைக்கணும்
மாலையும் கட்டணுமா
பாய விரிக்கணும்
பந்தியும் வைக்கணும்
அப்புறம் கேக்கணுமா
சித்திரைக்கு அப்புறம்
தேதி வைக்கணும்
மாலையும் கட்டணுமா
பாய விரிக்கணும்
பந்தியும் வைக்கணும்
அப்புறம் கேக்கணுமா
வேணான்னு சொல்லாதே
வீணாகத் தள்ளாதே
ஆமான்னு மட்டும்தான்
சொல்ல வேணும்
ஊருக்கு உன்னால
உபகாரம் உண்டம்மா
சாருக்கு சரியின்னு
சொல்லு சும்மா
ஓன் ராசி நிக்கிது மேலே
நல்ல ஆளு வந்ததனாலே
ஒன் ராசி நிக்கிது மேலே
நல்ல ஆளு வந்ததனாலே
ஒரு காலம் நேரம்
வந்தாச்சு உன் கிட்ட
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
பூவப் படைச்ச ஆண்டவன்தானே
வண்டையும் அதுக்கெனதான் படைச்சான்
நெலவப் படைச்ச ஆண்டவன்தானே
அல்லிய படைச்சு மலர வெச்சான்
ஆண்டவன் ஒண்ணுக்குத் தொணையா
ஒண்ண படைச்சு வச்சிருக்கான்
அதனால கல்யாணம்
பண்ணிக்கிறதில தப்பே இல்ல
உத்தம புத்திரன் பாரு
ஊருல வேறு யாரும் இல்லே
பொண்ணச் சுத்துற வேலை
இல்லாதொரு வேலை ஏதும் இல்லே
அட உத்தம புத்திரன் பாரு
ஊருல வேறு யாரும் இல்லே
ஹா பொண்ணச் சுத்துற வேலை
இல்லாதொரு வேலை ஏதும் இல்லே
சொத்துத்தான் ஏராளம்
உள்ளம்தான் தாராளம்
விட்டுட்டு ஓடாதே
சின்னப் பொண்ணே
வயக்காடு வரப்பெல்லாம்
அவனோட சொத்தம்மா
ஆம்பளப் புள்ள இவன்
சிங்கமம்மா
நீ ஆடு மேய்ச்சிட வேணா
கூழக் குடிச்சிட வேணா
நீ ஆடு மேய்ச்சிட வேணா
கூழக் குடிச்சிட வேணா
சரி சொன்னா போதும்
தகராறு வேணாம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
ஒன்னால ஊருக்கெல்லாம்
ஒழுங்கான வாழ்க்கை இருக்கு
பின்னால வருந்திட வேணா
பெரும் சொத்தும் காத்துக் கெடக்கு
அடங்காத துட்டும் இருக்கு
அவருக்கும் உன் மேல்
இஷ்டம் இருக்கு
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
யம்மா யம்மம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா