Kan Pesum Varthaigal

Kan Pesum Varthaigal Song Lyrics In English


கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை

ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

காட்டிலே
காயும் நிலவு கண்டு
கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை

தூரத்தில் தெரியும்
வெளிச்சம் பாதைக்கு சொந்தம்
இல்லை மின்னலின் ஒளியை
பிடிக்க மின்மினி பூச்சிக்கு
தெரியவில்லை

விழி உனக்கு
சொந்தமடி வேதனைகள்
எனக்கு சொந்தமடி அலை
கடலை கண்ட பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே
சொந்தமடி

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை


உலகத்தில்
எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும்
கொண்டாடுது ஒரு முறை
வாழ்ந்திட திண்டாடுது இது
உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

பனி துளி வந்து
மோதியதால் இந்த முள்ளும்
இங்கே துண்டானது பூமியில்
உள்ள பொய்கள் எல்லாம் அட
புடவை கட்டி பெண் ஆனது

ஏ புயல் அடித்தால்
மழை இருக்கும் மரங்களும்
பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து
வரும்

ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

ஹே கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை

விஷ்லிங் :