Kanaadha Deepam |
---|
பாடகர்கள் : அர்ஜுன் சிந்தூரி மற்றும் பத்மலதா
பாடல் ஆசிரியர் : யுகபாரதி
பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே
காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில் உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே கரும் பாறை மீது காலம் தூறிய தூறல் எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே
காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும் என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும் உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும் உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும்
தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும் பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும் என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும் உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும்
காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே