Kanalukkul Meen Pidithen

Kanalukkul Meen Pidithen Song Lyrics In English


கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
பூவை நான் வாட விட்டேனே
மீனை நான் ஓட விட்டேனேஏ

கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

உன்னை எங்கோ பார்த்தேன்
ஒரு நாள் காவியம்
என்னை என்ன கேட்டாய்
மறு நாள் நாடகம்

அன்பின் வாசல் போடும்
திரைகள் ஆயிரம்
இன்பம் இங்கே நாளும்
இருளின் ஓவியம்
பாதையுண்டு ஹோஹோ
ஊர்கள் இல்லை ஹோ ஹோ

பாதையுண்டு ஊர்கள் இல்லை
பாடல் உண்டு மேடை இல்லை
வீணையுண்டு மீட்டும் நேரம்
கைகள் இல்லை இங்கே

கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே


கண்ணீர் கங்கை பாயும்
கரை மேல் வாழ்கிறேன்
என் மேல் என்ன கோபம்
விதியை கேட்கிறேன்

நெஞ்சம் என்னும் பூவோ
சருகாய் ஆனதே
அன்பில் சிந்தும் தேனோ
விஷமாய் போனதே
தீபம் இங்கே ஹோஹோ
கோவில் இங்கே ஹோஹோ

தீபம் இங்கே கோவில் இங்கே
தெய்வம் எங்கே காதல் நெஞ்சே
சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம்
சொந்தம் ஒன்று தேடும்

கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
பூவை நான் வாட விட்டேனே
மீனை நான் ஓட விட்டேனேஏ

கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே
பூ மானே