Kanavanukkaaga

Kanavanukkaaga Song Lyrics In English


கணவனுக்காக
எதையும் செய்வாள் பத்தினி
உயிரையும் கூட தருவாள்
அந்த உத்தமி
பூமி இதைப் பெண் என்று
போற்றும் உலகம் ஹோ
பூமியினும் மேலம்மா
பெண்ணின் இதயம்
அன்பை வளர்ப்பாள்
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்

கணவனுக்காக
எதையும் செய்வாள் பத்தினி
உயிரையும் கூட தருவாள்
அந்த உத்தமி

தெய்வ வீணை இதை
இங்கு வீதியினில்
போட்டது விதிதானா
தேடி வந்த துணை வேறு மாலை இட
செய்தது விதி தானா

என்ன ஜென்மமடி
பெண்ணின் ஜென்மம் இது
சொல்லடி சிவசக்தி
எந்த நாளிலடி
இந்த வேதனைகள்
தீர்வது சிவசக்தி

தொடக்கம் எது முடிவும் எதுவோ
எதுவும் இங்கு தெரியாது
நடப்பதென்ன கதையா கனவா
அதுவும் இங்கு புரியாது
மாவிலைத் தோரணம் ஆடுது
அங்கொரு வாசலிலே
மங்கையினால் உயிர் ஆடுது
இங்கொரு ஊசலிலேஏ

கணவனுக்காக
எதையும் செய்வாள் பத்தினி
உயிரையும் கூட தருவாள்
அந்த உத்தமி


நாயன ஓசையில் அங்கே ஓர்
வாழ்த்தொலி கேக்குதம்மா
பேதையின் பாதையில் இங்கே ஓர்
கானம் நெருங்குதம்மா

அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை
ஆரம்பம் ஆகுதம்மா
அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை
பயணம் ஓய்ந்திடுமா

கணவனது வாழ்வுக்காக
நொந்து நொந்து நூலானாள்
தன் தலையில் தீயைத் தாங்கும்
மெழுகுவர்த்தி போல் ஆனாள்
வாழ்க்கையின் கணக்கினில்
ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா

மாதமும் தேய்ந்தொரு
நாள் என நொடி எனப் போகுதம்மா
விதி இதுவா அவன் எழுதும்
கணக்கிதுவா