Kanavil Nindra Thirumugam |
---|
கனவில் நின்ற திருமுகம்
கன்னி இவள் புது முகம்
கனவில் நின்ற திருமுகம்
கன்னி இவள் புது முகம்
கண்களுக்கும் நெஞ்சினுக்கும்
அறிமுகம்ம்ம்
அழகுக்கு ஒருத்தி என்றால்
அவள் இவள்தானோ
ஆசையின் ஊற்று என்றால்
அவள் இவள்தானோ
எனக்கென தோன்றி வந்த
இவள் அவள்தானோ
இரு பொருள் தாங்கி வந்த
தமிழ் மலர் தேனோ
கனவில் நின்ற திருமுகம்
கன்னி இவள் புது முகம்
கண்களுக்கும் நெஞ்சினுக்கும்
அறிமுகம்ம்ம்
கடிதங்களில் இவள்
கை வண்ணம் கண்டேன்
கரு விழியில் எடுத்த
மை வண்ணம் கண்டேன்
எழுத்துக்கும் செயலுக்கும்
சம்பந்தம் இல்லை
என்னதான் நாணமிது
செய்கின்ற தொல்லை
கனவில் நின்ற திருமுகம்
கன்னி இவள் புது முகம்
கண்களுக்கும் நெஞ்சினுக்கும்
அறிமுகம்ம்ம்