Kanavugale Kanavugale |
---|
கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ(4)
{கவியுரைத்த கற்பனைபோல்
கைப்பிடித்த பூங்கொடியாள்
பொய்யுரைத்த கவிதையை போல்
போன கதை என்ன சொல்வேன்} (2)
சிலை வடிக்க கல்லெடுத்தேன்
சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்
சிலை வடித்து முடியும் முன்னே
தலை வெடித்து போனதம்மா
கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
{ஆடியிலே காற்றடித்தால்
ஆயிரமாய் இலை உதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்
அத்தனையும் தழைத்து வரும்} (2)
அவள் ஆடிவரப் பார்த்திருந்தேன்
ஆடி வந்து சேர்ந்ததம்மா
ஐப்பசிக்கும் காத்திருந்தேன்
எப்பசியும் தீரவில்லை
கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ(4)
{காயமொன்று நீ கொடுத்தாய்
காய்ந்த வடு நீங்கவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ
கைதவழும் சேய் கொடுத்தாய்} (2)
உன் கதையை நான் எழுத
உயிரை வைத்து காத்திருந்தேன்
என் கதையை நீ எழுதி
ஏடுகளை மறைத்து விட்டாய்
கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ