Kanden Kanavile En Pangiye |
---|
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே
மந்தகாச மதனோ மதிவதனோ
சுந்தராங்கன் எவனோ அருகிலே
மந்தகாச மதனோ மதிவதனோ
சுந்தராங்கன் எவனோ அருகிலே
மருவிடவே வந்தான்
மாயனே மறவேனே
சகியே நானே மயங்கிடவே
மருவிடவே வந்தான்
மாயனே மறவேனே
மனமே கவர்ந்தான் இன்றே
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்
ஆவல் தந்தவன் யாரடி
கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்
ஆவல் தந்தவன் யாரடி
பூவில் புதிநிலை காணும் வண்டென
மறைந்து சென்றான் பாரடி
பூவில் புதிநிலை காணும் வண்டென
மறைந்து சென்றான் பாரடி
அழகு நகை புரிந்தான்
பழகும் நிலை உணர்ந்தான்
ஆசையுடனே வலையை
வீசி மறைந்தான்
மலைமாமகள் தரும்
மாமறை வடிவேலனோ
அலை மேல் அரவணை மேல்
துயில் வளர் மாதவனோ
மலைமாமகள் தரும்
மாமறை வடிவேலனோ
அலை மேல் அரவணை மேல்
துயில் வளர் மாதவனோ
கண் இமையில் கலந்தான்
என்னைப் பிரிந்தான்
என் நிலையை இழந்தேன் பாங்கியே
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே