Kandu Konden Naane

Kandu Konden Naane Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

கண்டு கொண்டேன் நானே ஏ
கண்டு கொண்டேன் நானே
ஒரு கண்ணியவானை நல்ல புண்ணியவானை
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே

சத்திய தாயின் புத்திரனாம்
ஆஆஆஆ
சத்திய தாயின் புத்திரனாம்
ஜானகி மணந்த உத்தமனாம்
சத்திய தாயின் புத்திரனாம்
ஜானகி மணந்த உத்தமனாம்
ஊருக்கு ஊரு மன்றங்கள் நூறு
தன் பெயராலே கொண்டவனாம்
என்றும் தாய்க்குலம் போற்ற நின்றவனாம்

அவரது படங்களை பார்த்தேன்
அடடா தினமும் ஹவுஸ்புல்
இருக்கிற ஸ்டார்கள் பல பேர்
ஆனால் அவர்தான் பவர்புல்

திக்கற்ற வக்கற்ற ஏழைக்கும் பாழைக்கும்
பக்கத்தில் வந்து துக்கங்கள் தீர்ப்பவரை

கண்டு கொண்டேன் நானே ஒரு
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே

நாரதரேஅந்த நாயகன் யாரு
யமனே அவர்தான் எம்ஜிஆரு
வேறென்ன பெருமை அதை நீ கூறு
ஜெயித்தார் உன்னை ஒருமுறை பாரு


ஹஹஹா
நாராயணா
என்னை ஜெயித்தாரா
என்ன கதைக்கிறீர் நாரதரே

தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே
துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே
தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே
துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே
வெட்டிய பாளை வளர்வது போலே
சட்டென எழுந்து நின்றானே
போது தேர்தலில் மோதி வென்றானே

பட்டியில் தொட்டியில் வாழும்
பாமர மக்களின் வர்க்கம்
இப்பவும் எப்பவும் அங்கே
பொன்மனசெம்மல் பக்கம்

மாரிக்கும் பாரிக்கும் மேலான தர்மத்தை
அன்றாடம் செய்கின்ற தெய்வீக மானிடனை

கண்டு கொண்டேன் நானே ஒரு
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே