Kangal Inainthathenna Female |
---|
கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
காலம் பிரித்ததென்ன
கவிதை சிரித்ததென்ன
அவள் கோவிலை நான் மூடிவிட்டேன்
அந்த நெஞ்சம் தவிப்பதென்ன
காகிதப் பூவிலும் வண்டு வரும்
கானல் நீருக்கும் பறவை வரும்
காகிதப் பூவிலும் வண்டு வரும்
கானல் நீருக்கும் பறவை வரும்
காதல் போனால் மானிட வாழ்வில்
நிம்மதி எங்கு வரும்
அவள் கோவிலை நான் மூடிவிட்டேன்
அந்த நெஞ்சம் தவிப்பதென்ன
வானம் பொழிந்தது பூமியிலே
அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை
வானம் பொழிந்தது பூமியிலே
அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை
அவளொரு வானம் அவனொரு மேகம்
இரண்டும் இணையவில்லை
அவள் கோவிலை நான் மூடிவிட்டேன்
அந்த நெஞ்சம் தவிப்பதென்ன
கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
காலம் பிரித்ததென்ன
கவிதை சிரித்ததென்ன