Kangal Irandil Onru Ponal |
---|
கண்கள் இரண்டில் ஒன்று போனால்
காண முடியாதே நல் அழகை
காண முடியாதே
கண்கள் இரண்டில் ஒன்று போனால்
காண முடியாதே நல் அழகை
காண முடியாதே
தூக்கம் ஏதினி
சுந்தர விழியே
துன்பங்கள் உறங்குவதில்லையே
துன்பங்கள் உறங்குவதில்லையே
தூக்கம் ஏதினி
சுந்தர விழியே
துன்பங்கள் உறங்குவதில்லையேஏ
துன்பங்கள் உறங்குவதில்லையே
இரவு மங்கை
இசைக்கும் கீதம்
ஒருவர்க்காக தானே
நல்விழிகள் உறக்கம் காணாதே
நல்விழிகள் உறக்கம் காணாதே
ஆசையே சுமைதான் என்றுமே
ஆனால் உலகினை ஆசை நீங்குமோ
ஆனால் உலகினை ஆசை நீங்குமோ
மேகம் மூடுவதாலே வானம்
மறைந்து போவதும் இல்லையே
வாழ்வும் இதுதானா
கண்கள் இரண்டில் ஒன்று போனால்
காண முடியாதே நல் அழகை
காண முடியாதே
இல்லற ஜோதி அணைந்து போனால்
இருளில் வழியறியாதே
இருளில் வழியறியாதே
இல்லற ஜோதி அணைந்து போனால்
இருளில் வழியறியாதே ஏ
இருளில் வழியறியாதே
கண்கள் இரண்டில் ஒன்று போனால்
காண முடியாதே நல் அழகை
காண முடியாதே