Kangal Irandum |
---|
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
பச்சைக் கிளியானால்
பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல்
தேரேறி ஓடுவேன்
சென்ற இடம்
காணேன் சிந்தை
வாடலானேன் சேதி
சொல்லும் யாரும் தூது
சொல்லக் காணேன்
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
நின்ற இடம்
யாவும் நிழல் போலத்
தோணுதே
அன்று சொன்ன
வார்த்தை அலை போல
மோதுதே
கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர்
வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ