Kangal Irandum Vidi Vilakaaga |
---|
கண்கள் இரண்டும் விடி விளக்காக
அப்புறம்
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
அப்புறம்
கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
ஸ் ஹா
கலந்திருப்போமே யுகம் யுகமாக
கண்கள் இரண்டும்
விடி விளக்காக
கட்டழகு மட்டும்
வெட்ட வெளியாக
கட்டழகு மட்டும்
வெட்ட வெளியாக
கைகள் இரண்டும்
தொட்ட சுகமாக
இருவர் : கலந்திருப்போமே யுகம் யுகமாக
மழைத் துளி விழ விழ முத்து விளையும்
ஆஹா
பனித் துளி விழ விழ மொட்டு மலரும்
ஓஹோ
தேன் துளி விழ விழ இதழ் திறக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
கனிச் சுமை கொண்டு வந்த கொடி வளையும்
ஆஹா
கன்னி இடை அல்லித் தண்டு
மெல்ல நெளியும்
ஓஹோ
மதுக் கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப் புது கதைகளில் துயில் மறக்கும்
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
வெட்ட வெளியாக
முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனைப் பக்கம்
ம் ம் எண்ணி எண்ணிப் பார்த்தால்
எத்தனை வெட்கம்
இருட்டிலும் படிக்கின்ற எழுத்தல்லவோ
சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
வெட்ட வெளியாக
சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்
ம்ம் ம் மன்னன் சொன்ன தீர்ப்பினில்
நியாயமிருக்கும்
இலக்கணம் வகுத்ததும் இரவல்லவோ
பின்னோடு வருகின்ற உறவல்லவோ
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
வெட்ட வெளியாக
இருவர் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக