Kangal Malarattume En Kanmani |
---|
புயலிலே ஒரு விளக்கு
போராடிக் கொண்டிருக்கு
பொன் விளக்கை காப்பதற்கு
நமக்குள் ஏன் வழக்கு
கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
எனைப் பார்த்த கண்கள் உனைப் பார்க்க வேண்டும்
கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
நாடும் நதியும் பெண் என்பார்
நிலவும் மலரும் பெண் என்பார்
பெண்மையின் தன்மை இயற்கையும் சொல்லும்
பெண்களின் உள்ளம் கருணையின் உள்ளம்
நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே
ஊரும் உலகம் இருக்கையிலே
உள்ளதென்றெண்ணும் மகன் கண்ணில்
ஒளித் தர வேண்டும் எனக்காக
நான் உயிரையும் தருவேன் அதற்காக
கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே
அன்றொரு நாள் ஒளியேற்றும்
அகல் விளக்காக நீயிருந்தாய்
ஏற்றிய விளக்கை எடுத்தெறிந்து
இருட்டினில் என்னை தவிக்கவிட்டாய்
கோவலன் வெறுத்தான் கண்ணகியை
அந்த கண்ணகி மன்னித்தாள் கோவலனை
பிரிந்தவர் கலந்தால் உறவினில்தான்
நான் பிரிந்தது என்றும் பிரிந்ததுதான்
தலைவியின் கோபம் மகன் மீதா
தண்டனை தந்தால் தாய் மனதா
நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே