Kangalinal

Kangalinal Song Lyrics In English


கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா
அஞ்சரை நாள்
ஹே என் விழியாலே
உடைந்து போனது நீயா

கூந்தல் எடுத்து
நான் முகம் துடைப்பேன்
குளிர் எடுத்தால்
வந்து உன்னை அணைப்பேன்

உன் ஆசையால்
என் பாஷைகள் தள்ளாடி
தவிக்கிறதே ஓ ஓஹோ
ஓஓ

கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா

ஒரு வாய் உணவும்
உள் நோக்கி செல்லாமல்
தொண்டையில் தர்ணா
செய்யுதே ஓ ஓ
சலிப்பே இல்லாத
தலைப்பில் நான் பேச காதல்
ஒன்று தான் உணர்ந்தேன்
அறிந்தேன்

உதடுகளால் வரம்
கொடுப்பாய் ஒதுங்கி
நின்றால் ஜுரம் கொடுப்பாய்
சருகென நான்
இருக்கயிலே நெருப்பு
வைத்தாய் விழிகளிலே

உன் மாதிரி உன்
மாதிரி பெண் இந்த உலகில்
இல்லை ஓஹோஹோஹோ

கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா


இலவம் பஞ்சிலே
செய்திட்ட மேலாடை
இரும்பாய் கணக்குது
அய்யோ ஹாஹாஹோ
இரவில் தனியாய்
இருக்கும் போதெல்லாம்
ஐந்தாறு தலை அணை
கிழித்தேன் ஓ ஓ

உந்தன் நகத்தால்
மெல்ல கிறுக்கி துடிக்க
வைத்தாய் செல்ல பொறுக்கி
குருதி எல்லாம்
குளிர வைத்தாய் நரம்பை
எல்லாம் அதிர வைத்தாய்

என் தேசத்தில்
சந்தோஷத்தில் கல் கூட
பூ பூக்குதே ஓஹோஹோ

கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா
அஞ்சரை நாள்
ஹே என் விழியாலே
உடைந்து போனது நீயா

கூந்தல் எடுத்து
நான் முகம் துடைப்பேன்
குளிர் எடுத்தால்
வந்து உன்னை அணைப்பேன்

உன் ஆசையால்
என் பாஷைகள் தள்ளாடி
தவிக்கிறதே ஓ ஓஹோ
ஓஓ

கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா