Kanmani Nillu

Kanmani Nillu Song Lyrics In English


ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கண்மணி நில்லு காரணம் சொல்லு
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை
காதலை மறுத்தால் நியாயமா
கண்களில் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறுமா

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா

மலர் ஒன்று எடுத்து
சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச் சரம் பிரித்து
மலர்வளை தொடுத்து
ஏழை என் காதலை நீ புதைத்தாய்

புதைத்தது மீண்டும்
மலராகும்
உன் பூஜையை நினைத்தே
சரமாகும்

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா


இதயத்தில் தோன்றும்
காதல் நிலவே
உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய்
உதயத்தை மறுத்து
இதயத்தை வெறுத்து
உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய்

காதலின் விதியே
இதுவானால்
கல்லறை தானே
முடிவாகும்

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா

கண்மணி நெஞ்சம்
கலங்கிய நேரம்
காதல் நினைவும் மாறுமா
கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம்
கல்லறை முடிவை தாங்குமா
காதலை வென்ற காதலன் உயிரை
பிரிந்தால் இனியும் வாழுமா
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்

ஆண் மற்றும்
லால லால லால லா(4)