Kanmaniye Nee Enge |
---|
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
கண்மணியே நீ எங்கே
உன் விழியாய் நான் இங்கே
பார்வை உன்னை தேடுகின்றதே
பாதை எங்கும் போடுகின்றதே
பனி மலரே முழு நிலவே
பாடலோடு ராகம் சேர துடிக்கின்றதே
கண்மணியே நீ எங்கே
மூணு ஜென்மமே நான் தேடும் பொன் வானமே
என் நெஞ்சமே நீ வாழும் வீடாகுமே
ஆகாயமே என் வாழ்வின் ஆதாரமே
என் நெஞ்சமே நீயாளும் ராஜாங்கமே
தேவியின் குரல் என்னை அழைத்தது
திருமுக தரிசனம் கிடைத்தது
தனிமையில் உயிரென துடித்தது
தலைவனை பார்த்ததும் சிரித்தது
ரதியிவள் உடலிங்கு ரகசியம் பேசிடுதோ
கண்மணிதான் நான் இங்கே
என் விழியே நீ அங்கே
பார்வை உன்னை கண்டுக் கொண்டதே
காதல் இன்று ஒன்று சேர்ந்ததே
பனி மலரே முழு நிலவே
பாடலோடு ராகம் சேர துடிக்கிறதே
கண்மணிதான் நான் இங்கே
எந்தன் வாழ்வின் ஏற்றும் தீபமே உன்முகமே
எந்த நாளும் சொந்தமாகுமே என் மனமே
முல்லை பூவை வானம் தூவுமே
ஒரு வரமே மழை வருமே
எல்லை மீறி வெள்ளம் பாயுமே
இது சுகமே புது சுகமே
உதகை மலையின் மேலே
உருகும் பனியை போலே
இதயமும் உருகுது இன்பமும் பெருகுது
இளமையின் கதவுகள் திறந்தது இரவினிலே