Kanna Thayullam Unnal

Kanna Thayullam Unnal Song Lyrics In English


கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள் நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும் வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள் நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும் வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள்

தாயல்லவோ தெய்வம் எந்த நாளும் வாழ்கின்ற பிள்ளை நீயல்லவோ செல்வம் உனைப் பாட மொழியேதும் இல்லை

ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு வாழ்ந்தேனே நான்தான் அன்று ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு வாழ்ந்தேனே நான்தான் அன்று எனக்காக நீ வாழ்ந்த காலங்கள் போதும் உனக்காக நான் வாழுவேன்

கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள்


பிள்ளையென்ற பாரம் பத்து மாதம் நான் தாங்கி நின்றேன் அன்னை என்ற பாரம் எந்த நாளும் நீ தாங்கி நின்றாய்

கால் வந்த பின்னே கண்ணே இன்னும் வேரை மரம் தாங்கலாமோ கால் வந்த பின்னே கண்ணே இன்னும் வேரை மரம் தாங்கலாமோ மகனே உன் மடிமீது தலை சாய்க்கும் முன்னே நான் கொண்ட கடன் தீர வேண்டும்

கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள் நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும் வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள்