Kanna Thoodhu Poda |
---|
ஆஅஆஆஆஅஆஆ
ஆஅஆஆஅஅஅஅஆ
ஆஅஆஆஆஆஆஅஅ
கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா
வானம் தொடவேஏ
நானும் முயன்றேன்ன்
நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன்
வேரறுந்து போகவில்லையே
காதல் அணிந்தேஏ
காலம் கரைந்தேஏ
தூரம் கடந்தே போன பிறகும்
பாசம் அது தீராதென
கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா
கானம் பாடும்
ஒரு தத்தை நானும் என
என்னைக் கண்ட விழி
எந்தை கொஞ்சல் மொழி
பாதை மாறுதென
பாசம் தீர்தல் முறைதானா
காதல் சூடும்
ஒரு வண்ணப் பூ இவளின்
மணத்தில் பிழையறிந்து
நிறத்தில் தவறறிந்து
மீண்டும் பூக்கச்சொல்லி
கேட்கும் எந்தை மனம்
நியாயம் காணுவேனாஆ
பாசம் அது மாறவில்லை
பாடல் அது முடிந்திடவில்லை
கண்ணில் வேர்விடும்
கண்ணீர்த் தாவரம்
நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல
ஆறும் சினம் ஆறும் என்றே
எந்தை காதில் நீயும் சொல்ல
தூது போடா
கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடாஆ
உண்மை சொல்லி வாடாஆஅ