Kanna Thoodhu Poda

Kanna Thoodhu Poda Song Lyrics In English


ஆஅஆஆஆஅஆஆ
ஆஅஆஆஅஅஅஅஆ
ஆஅஆஆஆஆஆஅஅ

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா

வானம் தொடவேஏ
நானும் முயன்றேன்ன்
நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன்
வேரறுந்து போகவில்லையே

காதல் அணிந்தேஏ
காலம் கரைந்தேஏ
தூரம் கடந்தே போன பிறகும்
பாசம் அது தீராதென

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா

கானம் பாடும்
ஒரு தத்தை நானும் என
என்னைக் கண்ட விழி
எந்தை கொஞ்சல் மொழி
பாதை மாறுதென
பாசம் தீர்தல் முறைதானா


காதல் சூடும்
ஒரு வண்ணப் பூ இவளின்
மணத்தில் பிழையறிந்து
நிறத்தில் தவறறிந்து
மீண்டும் பூக்கச்சொல்லி
கேட்கும் எந்தை மனம்
நியாயம் காணுவேனாஆ

பாசம் அது மாறவில்லை
பாடல் அது முடிந்திடவில்லை
கண்ணில் வேர்விடும்
கண்ணீர்த் தாவரம்
நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல

ஆறும் சினம் ஆறும் என்றே
எந்தை காதில் நீயும் சொல்ல
தூது போடா

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடாஆ
உண்மை சொல்லி வாடாஆஅ