Kannaalam |
---|
கைதட்டல்கள் :
கண்ணாலம் கண்ணாலம்
மேளம் கொட்டட்டும்
நம்மூரு நாதஸ்வரம்
மேகம் முட்டட்டும்
கண்ணாலம் கண்ணாலம்
வண்ணம் ஏறட்டும்
பொண்ணோட மஞ்சக் கன்னம்
செவப்பா மாறட்டும்
பிப்பீப்பீ கெட்டி மேளம்
சத்தம் கூடட்டும்
மாப்பிள்ளை காலு தானா
ஆட்டம் போடட்டும்
கண்ணாலம் கண்ணாலம்
மேளம் கொட்டட்டும்
நம்மூரு நாதஸ்வரம்
மேகம் முட்டட்டும்
எந்தன் கை மீது
மருதாணி போல்
நெஞ்சில் உனை தானே
நான் சூடினேன்
காதல் பெய்கின்ற
வண்ணங்களில்
எந்தன் உடை மாற
நான் ஆடினேன்
காற்றில் கேட்காத பாடல்கள்
கேட்கின்றேன்
கண்கள் இமைக்கின்ற ஓசைக்குள்
நான் காண்கிறேன்
கனா ஒரே கனா
நாளெல்லாம் அதே கனா
கண்ணாலம் கண்ணாலம்
நெய்யி மணக்கும்
பந்திக்கு முந்திக்கிட
நாக்கு நெனைக்கும்
கண்ணாலம் கண்ணாலம்
வாசம் கூடட்டும்
தக்கோலம் ஏலம் கிராம்பு
மூக்கத் தாக்கட்டும்
கற்பூரம் போல நெஞ்சு
பத்திகிடட்டும்
சந்தோசம் ஊரு பூரா
தொத்திகிடட்டும்
கண்ணாலம் கண்ணாலம்
நெய்யி மணக்கும்
பந்திக்கு முந்திக்கிட
நாக்கு நெனைக்கும்
நாவை சீண்டாத
சுவை ஒன்றிலே
உந்தன் பேர் சொல்ல
நாவூற்கிறேன்
தேனில் திண்டாடும்
வண்டாகவே
உன்னில் நான் வீழ்ந்து
கொண்டாடினேன்
நாசி பேசாத வாசங்கள்
உன்னாலே
எந்தன் மூச்சாக ஆவாயா
நான் கேட்கிறேன்
வினா ஒரே வினா
உன்னிலும் அதே வினா
மாப்பிள்ளை இதயம்
துடிதுடிக்கும்
ராத்திரி கேட்டு
அடம்புடிக்கும்
பொண்ணிவ போகிற வேகத்த
பாத்து கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
தாப்பா போட்டு பூட்டும்போது
தாப்பா போட்டு பூட்டும்போது
மாப்பிள்ளை மனசு படபடக்கும்
அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான்
இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா
அவன் தொட்டு பேசவே துடிச்சிடுவான்
இவ முத்தம் வெச்சே முடிச்சிடுவா
அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான்
இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா
தீண்டல் ஓர் தீண்டல்
நீ தீண்டவே
பெண்மை நான் இங்கு
கொண்டேனடா
மென்மை என் மென்மை
என்னென்று நீ
கண்டு சொல் என்று
நின்றேனடா
முத்தம் என்னென்று கேட்கும்
என் இதழோடு
உந்தன் இதழ் சேர்த்து நீ சொல்லும்
நாள் தானடா
விழா எந்தன் விழா
காதலில் விழும் விழா