Kannaana Poomaganae

Kannaana Poomaganae Song Lyrics In English


கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும் வரை
உன் தூக்கம் கலைக்கும் வரை
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே

உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
ஆரிரோ ஆரிரரோ

ஊத்துமலை தண்ணீரே
என் உள்ளங்கை சக்கரையே
ஊத்துமலை தண்ணீரே
என் உள்ளங்கை சக்கரையே
நீ நான் பெத்த தங்கரதம்
இடுப்பிலுள்ள நந்தவனம்
நீ நான் பெத்த தங்கரதம்
இடுப்பிலுள்ள நந்தவனம்

காயப்பட்ட மாமனின்று
கண்ணுறக்கம் கொள்ளவில்ல
சோகப்பட்ட மக்களுக்கு
சோறு தண்ணி செல்லவில்ல
ஏகப்பட்ட மேகமுண்டு
மழை பொழிய உள்ளமில்லே

கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
ஆரிரோ ஆரிரரோ


கால் மொளச்ச மல்லிகையே
நான் கண்டெடுத்த ரோசாவே
கால் மொளச்ச மல்லிகையே
நான் கண்டெடுத்த ரோசாவே
நீ தேன் வச்ச அத்திப்பழம்
முத்தம் தரும் முத்துச்சரம்

தண்ணீ தந்த மேகம் இன்று
ரத்தத்துளி சிந்துதடா
காத்திருந்தப் பானைக்குள்ளே
கண்ணீர்த்துளி பொங்குதடா
வீட்டு விளக்கெரிவதற்கு
கண்ணீர்எண்ணையில்லையடா

கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும் வரை
உன் தூக்கம் கலைக்கும் வரை
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

ஆரி ராரி ராரி ரார் ரோ
ஆரி ராரி ராரி ரார் ரோ