Kannaana Poomaganae |
---|
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும் வரை
உன் தூக்கம் கலைக்கும் வரை
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
ஆரிரோ ஆரிரரோ
ஊத்துமலை தண்ணீரே
என் உள்ளங்கை சக்கரையே
ஊத்துமலை தண்ணீரே
என் உள்ளங்கை சக்கரையே
நீ நான் பெத்த தங்கரதம்
இடுப்பிலுள்ள நந்தவனம்
நீ நான் பெத்த தங்கரதம்
இடுப்பிலுள்ள நந்தவனம்
காயப்பட்ட மாமனின்று
கண்ணுறக்கம் கொள்ளவில்ல
சோகப்பட்ட மக்களுக்கு
சோறு தண்ணி செல்லவில்ல
ஏகப்பட்ட மேகமுண்டு
மழை பொழிய உள்ளமில்லே
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
ஆரிரோ ஆரிரரோ
கால் மொளச்ச மல்லிகையே
நான் கண்டெடுத்த ரோசாவே
கால் மொளச்ச மல்லிகையே
நான் கண்டெடுத்த ரோசாவே
நீ தேன் வச்ச அத்திப்பழம்
முத்தம் தரும் முத்துச்சரம்
தண்ணீ தந்த மேகம் இன்று
ரத்தத்துளி சிந்துதடா
காத்திருந்தப் பானைக்குள்ளே
கண்ணீர்த்துளி பொங்குதடா
வீட்டு விளக்கெரிவதற்கு
கண்ணீர்எண்ணையில்லையடா
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும் வரை
உன் தூக்கம் கலைக்கும் வரை
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
ஆரி ராரி ராரி ரார் ரோ
ஆரி ராரி ராரி ரார் ரோ