Kannal Pesum Pennae

Kannal Pesum Pennae Song Lyrics In English


கண்ணால் பேசும்
பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா சலவை
செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறை தவறி செய்தேன் எனை
மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ
கேளடி கேளடி உனது கோபங்களும்
ஏனடி உனது சில்லென்ற கண்ணில்
பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி

கண்ணால் பேசும்
பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா

நிலா பேசுவது
இல்லை அது ஒரு குறை
இல்லையே ஆ குறை
அழகென்று கொண்டால்
வாழ்க்கையில் எங்கும்
பிழையில்லையே பெண்ணே
அறிந்துகொண்டேன் இயல்பே
அழகு என்றேன் பூவை வரைந்து
அதிலே மீசை வரையமாட்டேன்

மௌனம் பேசும்
போது சத்தம் கேட்க
மாட்டேன் மூன்றாம்
பிறையின் உள்ளே
நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி
வயசோ கசக்குதடி
சைகையிலே எனை
மன்னித்து சாபம் தீரடி

ஓ ஐ எம் சாரி
ஐ எம் சாரி ஐ எம் சாரி
ஓ ஹோ ஐ எம் சாரி
ஐ எம் சாரி ஐ எம் சாரி

கண்ணால் பேசும்
பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா


எங்கே குறுநகை
எங்கே குறும்புகள் எங்கே
கூறடி ஓ கண்ணில் கடல்
கொண்ட கண்ணில் புயல்
சின்னம் ஏதோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம்
சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம்
பாதிச் சிரிப்பு போதும்

காரப்பார்வை
வேண்டாம் ஓரப்பார்வை
போதும் வாசல் திறக்க
வேண்டாம் ஜன்னல்
மட்டும் போதும் வாழ்க்கை
கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை
நீ ஈரம் செய்யடி

ஓ ஐ எம் சாரி
ஐ எம் சாரி ஐ எம் சாரி
ஓ ஹோ ஐ எம் சாரி
ஐ எம் சாரி ஐ எம் சாரி

கண்ணால் பேசும்
பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா சலவை
செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறை தவறி செய்தேன் எனை
மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ
கேளடி கேளடி உனது கோபங்களும்
ஏனடி உனது சில்லென்ற கண்ணில்
பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி