Kannan Aruge Paada |
---|
கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள்
உனக்கென புரியல்லையா
கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள்
உனக்கென புரியல்லையா
ஒரு மோக மந்திரம் பாட வந்தவன்
பார்வை வேறெங்கே
புது ராகமாளிகை போல வந்தவள்
என்னைப் பார் இங்கே
இளம் பாவை என் மனம் உன்னிடம்
இனி தேவை மன்னவன் சம்மதம்
பெண் மேனியோ பொன் வீணையோ
என்னென்னதான் சங்கீதமோ
ஆனந்த ராகம் இன்று பாடக் கூடாதோ
கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
பாபாப பாபாபபாபாப பாபா
பாபாப பாபாபபாபாப பாபா
ஒரு ஆணுக்கென்னடி நாணம்
இப்படி பார்த்து சொல்லாயோ
இனிஅஞ்சும் மோகனம்
இன்னும் ஏனடி கேட்டு சொல்லாயோ
இரு ஆடை தொட்டது மெல்லென
பெரும் ஆசை தொட்டது சில்லென
சூடாமணி நீ சூடலாம்
தேமாங்கனி நீ தேடலாம்
அம்மாடி இன்னும் என்ன மௌனம் என்னோடு
கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இரு கையில் ஆடவும் மையல் தேடவும்
தூது வந்தேனே
மலர் கண்ணில் அஞ்சனம் சொல்லில் அஞ்சுகம்
ஏந்தி நின்றேனே
ஒரு காவல் வேலியை தாண்டலாம்
புது நாவல் மேனியை தீண்டலாம்
துள்ளும் விழி செந்தாமரை
பிள்ளை மனம் வெண்தாமரை
சாமந்திப்பூவும் போர்வை ஆக கூடாதோ
கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே