Kannan Enakkoru Pillai |
---|
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
மன்னன் சிரிப்பொரு முல்லை
அதன் மணமோ ஆனந்தக் கலைகளின் எல்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
மெல்லிதழ் தொடும் அவன் கரங்கள்
அந்த வேளையில் ஆயிரம் குணங்கள்
சொல்லவோ நானந்த சுகங்கள்
அவன் தொடுவதும் அணைப்பதும் எத்தனை விதங்கள்
ஹஹஹஹா
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
மடியினில் நான் வைத்து சிரிக்க
அவன் மயக்கத்தில் மேலாடை பறிக்க
இடையினை ஓர் கையில் வளைக்க
அந்த இன்பத்தை அல்லாமல் வேறெதை நினைக்க
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
இவனுக்கு இவளென்று கருத்து
அந்த இறைவன் எழுதிய எழுத்து
இவனுக்கு இவளென்று கருத்து
அந்த இறைவன் எழுதிய எழுத்து
இடமுண்டு நேரங்கள் உண்டு
என் இதயமே பொறுமைக் கொள் இருவரும் ஒன்று
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை