Kannan Leelaigal Seivaanae |
---|
கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன் கண்ணன்
லீலைகள் செய்வானே
கானக மடுவில் காளியன் தலையில்
களி நடம் புரியும் பாதன் ஆஆ
கானக மடுவில் காளியன் தலையில்
களி நடம் புரியும் பாதன்
வானவர் வாழ மாநில மீது
ஆநிரை மேய்த்த என் நாதன்
கண்ணன் லீலைகள் செய்வானே
ஆயர் மனையில்
வெண்ணெய் திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே
மாயப் புன்னகை செய்து மயக்கும்
மீராவின் பிரபு தானே
கண்ணன் லீலைகள் செய்வானே
பிரேம நதியின் தீர மதனில்
மீராப் பிரபுவும் வருவான் ஆ
பிரேம நதியின் தீர மதனில்
மீராப் பிரபுவும் வருவான்
திரு முக மதனில் குருநகை மலர
அகமும் புறமும் நிறைவான்
கண்ணன் லீலைகள் செய்வானே
வானம் அளந்தான்
காளை நினைந்தால்
மாயவினை அகலாதோ
கனி இதழ் ஊதும்
குழலிசை கேட்டால்
கல் மனமும் கரையாதோ
கண்ணன் லீலைகள் செய்வானே
மாலினைக் காண மாமுனி வோர்கள்
பாற்கடல் தேடியே வந்தார்
ஆலிலை மேலே துயில்கொள்ளும் அமுதைக்
காண்கிலம் என்று வியந்தார்
அமுதைக் காண்கிலம் என்று வியந்தார்
ஆண் மற்றும்
சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்
சந்திர சூரியர் வந்தார்
அங்கு மிங்குமாய் ஐயனைத்தேடி
ஆயர் மனைதனில் கண்டார் தேடி
ஆயர் மனைதனில் கண்டார்
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான் பேதை
மீரா ஹ்ருதயம் தன்னில்
அடியாள் மீராஆஆ ஆஆஆஆ
அனைவரும் : மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்ஆ
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறாப் பிரேமை தந்தான்
அனைவரும் : கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன்
கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே