Kannan Vanthathaaley |
---|
கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளேஏ
கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
துன்பங்கள் வந்து எமை வாட்டும் போது
துணை உனது திருப்பாதங்களே
துணையும் இல்லாது தவிக்கின்ற பேர்க்கு
வழி சொல்லுமே உந்தன் வேதங்களே
நன்மை வாழ நலிவுகள் தீர
நலமே உன்னை நாடினோம்
உண்மை ஜோதி ஒளியினைக் காண
உறவே உன்னை பாடினோம்
ஒரு கீதை தந்து பாதை தந்து
தருமம் தந்த தேவனே
கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளே
கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
திருப் பாற்கடலில் பள்ளி கொண்டாயே
திருவரங்கா உன்னையே நினைத்தோம்
திருவடி புகழை தினம் தினம் பாடி
அருட்கடலே உன்னையே பணிந்தோம்
பக்தர் உள்ளம் இன்பம் காண
பக்கம் நிற்கும் நாதனே
பலவாம் துன்பம் பனி போல் போக்கும்
பதியே எங்கள் ஜீவனே
ஒரு கீதை தந்து பாதை தந்து
தருமம் தந்த தேவனே
கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளேஏ
கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது