Kannan Vanthathaaley

Kannan Vanthathaaley Song Lyrics In English


கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளேஏ

கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது

துன்பங்கள் வந்து எமை வாட்டும் போது
துணை உனது திருப்பாதங்களே
துணையும் இல்லாது தவிக்கின்ற பேர்க்கு
வழி சொல்லுமே உந்தன் வேதங்களே

நன்மை வாழ நலிவுகள் தீர
நலமே உன்னை நாடினோம்
உண்மை ஜோதி ஒளியினைக் காண
உறவே உன்னை பாடினோம்
ஒரு கீதை தந்து பாதை தந்து
தருமம் தந்த தேவனே

கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளே

கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது


திருப் பாற்கடலில் பள்ளி கொண்டாயே
திருவரங்கா உன்னையே நினைத்தோம்
திருவடி புகழை தினம் தினம் பாடி
அருட்கடலே உன்னையே பணிந்தோம்

பக்தர் உள்ளம் இன்பம் காண
பக்கம் நிற்கும் நாதனே
பலவாம் துன்பம் பனி போல் போக்கும்
பதியே எங்கள் ஜீவனே
ஒரு கீதை தந்து பாதை தந்து
தருமம் தந்த தேவனே

கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளேஏ

கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது