Kannan Yaaradi

Kannan Yaaradi Song Lyrics In English


கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே

கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே

மாலை சூடும் வேளை வந்தது
யாருக்கென்ற கேள்வி வந்தது
உரிமை கொண்ட உறவு என்பது
இந்த வேளை பார்த்து எங்கு சென்றது

மனம் உன்னைத்தானே
தேடுகின்றது
உனை எண்ணித்தானே பாடுகின்றது
நீயில்லாமல் வாடுகின்றது

கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே


பருவம் என்ற பூ மலர்ந்தது
ஒருவன் கையில் நான் கொடுத்தது
ஆசை என்னும் தேன் வடிந்தது
இதை உன்னையன்றி யார் குடிப்பது

இதில் மெல்ல மெல்ல நேரம் சென்றது
உனை எண்ணி எண்ணி நெஞ்சம் நின்றது
நேரில் காண ஏங்குகின்றது

கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே