Kannan Yaaradi |
---|
கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே
கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே
மாலை சூடும் வேளை வந்தது
யாருக்கென்ற கேள்வி வந்தது
உரிமை கொண்ட உறவு என்பது
இந்த வேளை பார்த்து எங்கு சென்றது
மனம் உன்னைத்தானே
தேடுகின்றது
உனை எண்ணித்தானே பாடுகின்றது
நீயில்லாமல் வாடுகின்றது
கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே
பருவம் என்ற பூ மலர்ந்தது
ஒருவன் கையில் நான் கொடுத்தது
ஆசை என்னும் தேன் வடிந்தது
இதை உன்னையன்றி யார் குடிப்பது
இதில் மெல்ல மெல்ல நேரம் சென்றது
உனை எண்ணி எண்ணி நெஞ்சம் நின்றது
நேரில் காண ஏங்குகின்றது
கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே