Kannana Kannae |
---|
கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே
நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே
என் ஜென்மம் உன் அன்பிலே
மடிமேல் நிலவே விடியும் பொழுதே
கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே
ஆஅஆஆஆஆஅலா லா லா லா
தாயாரை யார் என்று காணாதவன்
தாலாட்டு பாட்டொன்றும் கேளாதவன்
நீ இன்றி சொந்தங்கள் இல்லாதவன்
நீ அன்னை நீ பிள்ளை என்றானவன்
உனது சொந்தம் உனது பந்தம்
எனது வாழ்வின் வசந்த காலம்
நீ எந்தன் தேவாலயம்
கலைமான் விழியே மழலை மொழியே
எந்நாளும் காயாத கங்கை நதி
என் மார்பில் சாய்ந்தாடும் தங்கை இவள்
நீ போகும் பல்லாக்கு என் தோளிலே
நீதானே கார்காலம் என் வானிலே
மலரின் மீதும் நடக்கும் போதும்
உனது பந்தம் சிவந்து போகும்
என் நெஞ்சம் தாங்காது அம்மா
சிரித்தாள் சிரிப்பேன் அழுதால் துடிப்பேன்
கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே
நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே
என் ஜென்மம் உன் அன்பிலே
மடிமேல் நிலவே விடியும் பொழுதே
கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே