Kannana Kanne Kanneer |
---|
கண்ணான கண்ணே
கண்ணீர் ஏன் இங்கே
அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே
தாய் பாடும் ராகம்
நான் பாடும் நேரம்
கண்ணான கண்ணே
கண்ணீர் ஏன் இங்கே
அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே
போதை தேடிப் போகும் நெஞ்சில்
ஞான தீபம் ஏறுமா
ஓடும் நீரில் போடும் கோலம்
கண்ணில் வந்து தோன்றுமா
போதை தேடிப் போகும் நெஞ்சில்
ஞான தீபம் ஏறுமா
ஓடும் நீரில் போடும் கோலம்
கண்ணில் வந்து தோன்றுமா
மேற்க்கில் காலை தோன்றாது
மின்னல் மாலை ஆகாது
தோளோடு தாங்கி தாலாட்டுப் பாடி
ஆளாக்கும் உள்ளம் என்னென்ன எண்ணும்
உன்னை நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான்
கண்ணான கண்ணே
கண்ணீர் ஏன் இங்கே
அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே
ஆஆஅஆஆஆஆஆஆஆ
கண்கள் மூட நேரம் இன்றி
பிள்ளை தூங்கப் பாடுவாள்
காற்று வந்து தீண்டும் என்று
சேலை கொண்டு மூடுவாள்
அன்பு கொண்ட தாய் பாசம்
எல்லை இல்லா ஆகாசம்
நோயோடு வாழும் தாய் வாழ வேண்டும்
நீடூழிக் காலம் நீ வாழ வேண்டும்
உன்னை நான் அன்பு கொண்டு வாழ்த்தினேன்
கண்ணான கண்ணே
கண்ணீர் ஏன் இங்கே
அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே
தாய் பாடும் ராகம்
நான் பாடும் நேரம்
கண்ணான கண்ணே
கண்ணீர் ஏன் இங்கே
அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே