Kannanavan Sonnathellam |
---|
கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன் கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்
அன்று நீ நிறைந்த விழியில் இன்று நீர் நிறைந்ததென்ன கண்ணீர் நிறைந்ததென்ன கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்
உறவேது பகையேது அறியாத இளமானின் விதியோடு விளையாடினாய் நல்ல துணையாக உனைத் தேடி வரும் பெண்ணின் இள நெஞ்சை புரியாமல் விலை பேசினாய்
குணம் நாலும் குறையாமல் மணவாளன் நலம் வேண்டி பல கோயில் படியேறினேன் உந்தன் மனம் மாறும் திருநாளை இமையாத விழியோடு தினம் தோறும் எதிர்பார்க்கிறேன் உனை நானும் எதிர்பார்க்கிறேன்
கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்ஆஆஆ
உனக்காக ஒரு ரோஜா வளர்ந்தேனே மன மேட்டில் உன் மார்பில் அதை சேர்க்கவே அந்த மலர்கின்ற பொழுதெந்தன் விரல் மீது காயங்கள் பூ ஏனோ முள்ளானதே
ஒரு வானம் ஒரு பூமி ஒரு எண்ணம் ஒரு சொந்தம் என்றென்றும் நான் வேண்டுவேன் இனி உருவாகும் எதிர்காலம் நலமாகும் நமதாகும் அந்நாளை எதிர்பார்க்கிறேன் நன்னாளை எதிர்பார்க்கிறேன்
கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்
அன்று நீ நிறைந்த விழியில் இன்று நீர் நிறைந்ததென்ன கண்ணீர் நிறைந்ததென்ன கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்