Kannapura Ooratha

Kannapura Ooratha Song Lyrics In English


காலம் கணக்கறியா கற்பகமே ஆத்தாளே ஆலம் அமுதாகும் அம்மா நீ பார்த்தாலே இங்கே அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு

கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா

கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா

உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி

மக்களெல்லாம் குற்றம் செய்தால் மன்னவரே கேட்டிடுவார் மன்னவரே குற்றம் செய்தால் மகமாயி கேளடியோ மன்னவரே குற்றம் செய்தால் மகமாயி கேளடியோ

கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா

தாயறியா சூதுமில்லை வாயறியா சோறுமில்லை நீயறியா சேதியில்லை உன்னை மீறி ஏதுமில்லை


கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை கண்ணியத்தை விட்டதில்லை கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை கண்ணியத்தை விட்டதில்லை

புண்ணியத்தை குருடாக்கி பாக்குறது நியாயமில்லை புண்ணியத்தை குருடாக்கி பாக்குறது நியாயமில்லை

ஆயிரங்கண் மாரியம்மா அட்டையின்றி வாடியம்மா சேய் இழந்த கண்ணொளியை சீக்கிரமே தாடியம்மா

கற்புடைய பெண்களுக்கு காவல் நிற்கும் காளியம்மா கோரிக்கையை கேட்ட பின்னும் வேறு என்ன ஜோலியம்மா கோரிக்கையை கேட்ட பின்னும் வேறு என்ன ஜோலியம்மா

கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா

கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா