Kannara Kaanpadhenro |
|---|
கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
மண்ணாளும் மகராஜன் மகளெனும்
துயர் வாழ்வை
மண்ணாளும் மகராஜன் மகளெனும்
துயர் வாழ்வை
எண்ணாமலே ஏழை எனதன்பின்
மனப் பூவை
எண்ணாமலே ஏழை எனதன்பின்
மனப் பூவை
கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
கனவினிலே கண்டு
காமுறும் பொருள் போலே
ஹேஹேஹேஏஏஏ
கனவினிலே கண்டு
காமுறும் பொருள் போலே
கைக் கொண்ட கனியது
வாய்க் கெட்டா விதம் போலே
ஹேஏஹேஏஏஏ
கைக் கொண்ட கனியது
வாய்க் கெட்டா விதம் போலே
நினைவது வீணாச்சே நீரினிற்
குமிழ் போலே
நினைவது வீணாச்சே நீரினிற்
குமிழ் போலே
நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே
நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே
கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
