Kannazhagu Singarikku |
---|
கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்
பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
இன்னும் என்ன நாணம் என்னோடு
அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது
அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது
மெல்ல வரும் தூது கண்ணோடு
பஞ்சணையின் மேடையில்
எனை தொடும் அன்பு மனம்
நெஞ்சமெனும் ஊஞ்சலில்
தினம் வரும் இன்ப சுகம்
பஞ்சணையின் மேடையில்
எனை தொடும் அன்பு மனம்
நெஞ்சமெனும் ஊஞ்சலில்
தினம் வரும் இன்ப சுகம்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்
தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
ஆசை மனம் ஏங்கும் அங்கேதான்
தொட்டவுடன் மேனியில்
மழைமுகில் மின்னல் வரும்
துள்ளி வரும் கைகளோ
தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்
கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்