Kanne En Karmugile |
---|
கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ
பொண்ணே என் பூங்கொடியே
போராட்டம் ஏனடியோ
பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்
கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ
நான் என்றும் நீ என்றும்
வேறென்று ஆகாது
கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது
பூவோடு சேராமல்
காற்றெங்கும் போகாது
பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது
தீபத்தைப் போல்
என்றும் உன் வாழ்வுதான்
தியாகங்கள் உன்னோடுதான்
பாசத்தில் மாறாது உன் பார்வைதான்
பார்க்கின்றேன் உன்னோடுதான்
தனியாய் இருந்தேன்
துணையாய் இணைந்தாய்
மாறாது நம் காதலே
கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ
கல்யாணப் பூ மாலை
போடாத ஓர் மாது
கண்ணீர் மாலை
போட்டாளே இப்போது
தோளோடு பூ மாலை
வாராமல் போகாது
தொடரும் உறவோ
எப்போதும் மாறாது
சோகத்தின் சங்கீதம் சுகமானது
சொந்தங்கள் திரை போடுது
பாசத்தில் துன்பங்கள் உண்டானது
வேஷங்கள் விலை பேசுது
உயிரும் உறவும்
உணர்வும் நீயே
உன்னில் இவள் பாதியேஏய்
கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ
பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்
கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ
இருவர் : ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்
ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்